உதவி கேட்கப் போனேன்; ஆபீஸில் வைத்து சீரழித்தார் சீமான் - விளாசிய விஜயலட்சுமி

உதவி கேட்கப் போனேன்; ஆபீஸில் வைத்து சீரழித்தார் சீமான் - விளாசிய விஜயலட்சுமி


சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள திரையுலகில் வெடித்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்,

திரைத்துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவாக கூறியிருந்தார். தற்போது இதற்கு பதிலடி கொடுத்து நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எப்படி சீமான் இப்படி நடிக்கிறீங்க? என் வாழ்க்கைய சீரழிச்சத மறந்துட்டிங்களா? முதலில் சீமானிடமிருந்து தான் பெண்களை காப்பாற்ற வேண்டும். 2008-ம் ஆண்டு நாங்க உங்க ஆபீஸுக்கு எங்க அக்காவுடைய குழந்தையை தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு கதறிகிட்டு வந்து நின்னோமே..

அப்ப என்ன மிஸ்டர் சீமான் நீங்க செய்தீங்க? என்னை காப்பாற்றினீங்களா? அதே ஆபீசில் வைத்து என்னை கதற கதற என் வாழ்க்கையை சீரழிச்சீங்களே.. மறந்துட்டீங்களா? 6 முறை நீங்க பிணையில் இருக்கும் போது கூட மதுரையில் நான் தேவைப்பட்டேன் அதை மறந்துவிட்டீங்களா?

திமுககாரங்க முன்னாடி பேசாதேன்னு சொன்னீங்களே? கயல்விழிக்கும் எதுவும் தெரிய வேண்டாம்னு சொன்னீங்களே? ஆனால் இந்த டீலை பேசிவிட்டு என்னையும் திமுகவையும் சேர்த்து வைத்து கொச்சை கொச்சையாக பேசுறீங்களே அதை மக்கள் மறந்துட்டாங்கன்னு நினைச்சீங்களா? என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.  

ibctamilnadu


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post