ஆஸ்திரேலியாவில் கடந்து மூன்று மாதங்களில் குரங்கம்மை சம்பவங்கள் அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் கடந்து மூன்று மாதங்களில் குரங்கம்மை சம்பவங்கள் அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் கடந்த மூன்று மாதங்களில் குரங்கம்மை சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. 

குறைந்த தடுப்பூசி விகிதங்கள் நகரங்களுக்கு வெளியே குரங்கம்மை சம்பவங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ஒரு சுகாதார நிபுணர் கவலை தெரிவித்தார்.

2024-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 737 குரங்கம்மை நோய் தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. 

இவ்வாண்டு பதிவு செய்யப்பட்ட குரங்கம்மை நோய் தொற்று சம்பவங்கள் பெரும்பாலானவை தென்கிழக்கு மாநிலங்களில் நிகழ்ந்தன.

இரண்டு சம்பவங்களைத் தவிர மற்ற அனைத்திலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மே மாதம் முதல் குரங்கம்மை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய சுகாதார, முதியோர் பராமரிப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஏஎஃப்பி தெரிவித்தார்.

குரங்கம்மை பாதிப்புக்குள்ளாகும் அபாயத்தில் உள்ள அனைத்து வயதினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கிறது.

தடுப்பூசி விகிதம் குறைவாக இருக்கும் நகரங்களுக்கு வெளியே கிருமி கண்டறியப்பட்டுள்ளது என்று சிட்னியின் பொதுநல மருத்துவர் டாக்டர் மேத்யூ ஷீல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

குரங்கம்மை, பாதிக்கப்பட்ட விலங்குகளால் மனிதர்களுக்கு பரவும் கிருமிகளால் ஏற்படுகிறது. 

இது நெருங்கிய உடல் தொடர்பு மூலம் மனிதனிடமிருந்து மனிதனுக்குப்  பரவுகிறது.

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post