ஆரோக்கிய வாழ்வும் அதற்கு உதவும் மருத்துவ முறைகளும் ( Medical Systems ).

ஆரோக்கிய வாழ்வும் அதற்கு உதவும் மருத்துவ முறைகளும் ( Medical Systems ).


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது யாரும் அறிந்த, என்றுமே மாற்ற முடியாத lபழ மொழி யாகும். இன்றைய நாகரீக வாழ்வில் அறிந்து உண்ணும் ஊன் உணவே ஆரோக்கியத்தின் இரகசியமாகும் என்ற புதுமொழியை உருவாக்க வேண்டி இருக்கின்றது.  நமது முன்னோர்கள் இயற்கையான ஆரோக்கியமான ஊன் உணவுகளை எடுத்தும் சுறு சுறுப்பாக இயங்கியும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். வயது முதிர்ச்சிதான் அவர்கள் அநேகரின் வாழ்வின் எல்லையாக இருந்தது.

ஆனால் நாம் இன்று அவ்வாறு இல்லை. பல்வேறு இரசாயனங்களும் நச்சுக்களும் அடங்கிய ஊன் உணவுகளுடன் , அப்பியாசங்களும் அற்ற ஒரு வாழ்க்கையை தான்  வாழ்கின்றோம்.  இதனால்தான் அறுபதில் வரவேண்டிய நோய்கள் இருபதில் வந்து விடுகின்றன.

 அரிசி, தானியங்கள், மரக்கறி வகைகள் பழ வர்க்கங்கள், பிஸ்கட் வகைகள், இனிப்புப் பண்டங்கள், பானங்கள் போன்ற இன்னும் பல உணவுப் பொருட்களில் ஏகப்பட்ட இரசாயனச் சேர்மானங்கள் சேர்க்கப் படுகின்றன.  அவைகள் பசளைகளாக, பீடை கொல்லிகளாக,  கெடாமல் பாதுக்காப்பானாக, நிறமூட்டிகளாக,  சுவையூட்டிகளா க காணப்படலாம். இவைகள் அனுமதிக்கப் பட்டவைகளாகவோ, தடை செய்யப் பட்டவைகளாகவோ இருக்கலாம். தயாரிப்பாளர்கள் எப்போதும் இலாபத்தையே நோக்குவார்கள். நுகர்வோரின் ஆரோக்கியத்தை அல்ல. 

பல  உணவுகள், பானங்கல், வைத்திய ஆலோசனைகள் அற்ற மருந்துகள், போதைப் பொருட்கள் என்பனவற்றில் அடங்கக் கூடிய நச்சுகள், ஈரலின் சிக்கலான பாதுகாக்கும் சக்தியையும் நரம்பு மண்டலத்தையும் பாதிப்பதால் , உடலின் ஏனைய செயல்பாடுகளையும் பாதித்து பல நோய்களுக்கு இவைகளும் காரணமாக்கிறது.

எனவே, ஆரோக்கியமாக வாழ எம்மால் முடிந்தவரை பாதுக்காப்பான ஊன் உணவுகளை எடுப்பதோடு அப்பியாசமும் இன்றியமையாதது ஆகும்.

அதே நேரம் எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் நோய்கள் தொற்றுகள் வராது என்று கூறமுடியாது. எனவே நோய்கள் ஏற்படும் போது அதற்கான சிகிச்சைகளை பெறுவது கட்டாயமானதே.  இதன்போது தனக்குப் பொருத்தமான சிகிச்சையை யாரிடம் பெறலாம் என்பதை தீர்மானிக்கும் அறிவு ஒவ்வொரு நோயாளிக்கும் இருப்பது மிகவும் பிரயோசனமானது. எமது நாட்டிலே பல வைத்திய முறைகள் (medical systems )காணப்படுகின்றன. அவைகள் ஆங்கில மருத்துவம்,ஆயுர்வேதம், யூணானி , சித்தம், பாரம்பரிய சுதேச வைத்தியம், ஆக்கியூபஞ்சர், ஹோமியோப்பத்தி போன்றவற்றைக் குறிப்பிடலாம். 

அவற்றில் எதுவும் 100% முழுமையானது என்று கூற முடியாது. ஒவ்வொன்றிலும் சிறப்பம்சங்கள் இருப்பதோடு இயலாமைகளும் இருக்கின்றன.  அதேநேரம் தகுதிபெற்ற வைத்தியர்கள் மத்தியில் தகுதியற்ற போலி வைத்திய நடிகர்களும் நாடு பூராகவும் ஆங்காங்கே காணப்படுகிறார்கள். இவர்களிடம் சிகிச்சை பெறுவது ஆபத்தாக அமையும். விஷேடமாக ஆயுர்வேதத் துறையில் தகுதியற்றவர்கள் கூட போலியான விளம்பரங்களை பதிவிட்டு, பொய்யான யூடியூப் பதிவுகளையும் இட்டு நோயாளர்களை  ஏமாற்றும் நிலை காணப்படுகிறது. 
ஆயுர்வேதத் துறையில் BAMS, BUMS, BSMS, DIMS பட்டங்கள் இருக்கிறதா என்று பாருங்கள். இவர்கள் பல்கலைக்கழக பட்டம் பெற்றவர்களும், ஆங்கில மருத்துவம் தொடர்பான அடிப்படை தெளிவும் உள்ளவர்களாக இருப்பார்கள்.  எனினும் இவர்கள் ஆங்கில மருத்துவம் பார்ப்பது முறையல்ல.

இந்தப் பட்டங்கள் இல்லாது பதிவு இலக்கம் மட்டும் வழங்கப்படுவோர் பாரம்பரிய ஆயுர்வேத வைத்தியர்கள் ஆவார்கள். இவர்களுக்கு பரம்பரையாக வந்த அறிவும், ஒரு வைத்தியருக்குக் கீழ் வேளை செய்த அனுபவமும் தான் கருத்தில் கொள்ளப்படும்.

 மேலும் பலர் போதிய பாரம்பரிய சுதேச மருத்துவ அறிவு இன்றி வைத்தியம் செய்வோர்களாக காணப்படுகிறார்கள். இவர்கள் நோயாளிக்கும் தீங்கு செய்து, ஆயுர்வேத மருத்துவத்தின் பேரையும் கெடுப்பவர்கள் ஆவார்கள். ஹோமியோப்பத்தி, அகியுபஞ்சர் சிகிச்சைகளும் நல்லவைதான். 

ஆனாலும் சில மாத கற்கைகளின் பின் வழங்கப்படும் சான்றுதல்களை வைத்துக் கொண்டு வைத்தியர்கள் ஆன பலரே இங்கு காணப்படுகிறார்கள். இன்னொரு வைத்தியத் துரைசார் தகுதி இருக்கும் ஒருவரிடம் அகியுபஞ்சர் சிகிச்சை பெற்றுக்கொள்வதும்,தகுதி உறுதிசெய்யப்பட்ட ஹோமியோப்பத்தி டாக்டர்களிடமே அவர்களது சேவையை பெற்றுக்கொள்ளவும் வேண்டும். இவைகள் தான் உங்களுக்கு பாதுக்காப்பாக அமையும்.

 ஆங்கில மருத்துவத் துறையில் MBBS ஆக யார் இருந்தாலும் சமமான தகுதி காணப்படும். அதன் பின்னர் ஏதாவது துறையில் விஷேட மருத்துவர் ஆகலாம். எனினும் இங்கும் கவனிக்க வேண்டிய விடயங்கள் இருக்கின்றன. வெளிநாடு சென்று படிப்பை பூர்த்தி செய்யாதவர்களும் , இங்கு தகுதிகான் தேர்வை முடிக்காதவர்களும்,Nurses/ தாதிகள், மருந்தாளர்கள் /pharmacists போன்றோரும் மருத்துவர்கள் போல டிஸ்பென்சரி நடத்துபவர்களும் இருக்கின்றார்கள். இவர்களிடம் சிகிச்சை பெறுவது ஆபத்தாகும்.  மேலும், ஆங்கில மருத்துவம் பார்ப்போர் பலர், பல வைத்தியர்களிடமும் ஓடித் திரிபவர்களாக இருப்பார்கள். 

இது பிழையாகும்.  உங்களுக்கு விருப்பமான MBBS ஒருவரை குடும்ப டாக்டராக (family Doctor( வைத்துக் கொள்ளுங்கள்.  அவரால் முடியாத போது, அவரிடம் ஒரு கடிதத்துடன் விசேட மருத்துவரை அணுகுங்கள். இதுதான் சிறந்த முறையாகும். இல்லாவிடின், உங்களுக்கு உரிய சிகிச்சை தவறி விடுவதோடு, வீணான செலவுகளுக்கும், தனியார் மருத்துவமனைகளின் ஏமாற்றும் நாடகங்களுக்கும் முகம் கொடுக்க நேரும். சில தனியார் வைத்தியாசலைகளில் சேவையில் உள்ள ஒருசில மருத்துவ நிபுணர்கள் தேவை இல்லாத விலை கூடிய பரிசோதனைகளை செய்விப்பதும், கட்டாயமில்லாத சத்திர சிகிச்சைகளை கட்டாயப் படுத்துவதும் பிழையான ஒரு செயலாக இருக்கின்றது. 

குறிப்பாக கண்டியில் ஒரு பிரபல தனியார் வத்தியாசலையில் சிறுநீரக மருத்துவ நிபுணர் தேவையான தேவையற்ற எல்லோருக்கும் சிஸ்டஸ்கொபி  என்னும் கெமரா சோதனைகள் செய்து சாம்பாதிக்கிறார். 

ஒரு சோதனைக்கு 75000/= /ஒரு இலட்சம் அரவிடப் படும். தினமும் 20-25 நபர்களுக்கு இதைச் செய்கிறார்!!!. உங்களிடம் ஒரு குடும்ப டாக்டர் இருந்தால் இவ்வாறு ஏமாறும் முஸ்லிம் நோயாலர்கள் இருக்க மாட்டார்கள்.

இதுபோலவே, ஆங்கில மருத்துவத்தில் ஆய்வு கூட சோதனைகள் மிகவும் முக்கியம் வாய்ந்தது. அவற்றை நீங்கள் நவீன நம்பகரமான லப்களிலேயே (Laboratory) செய்து கொள்வதும் முக்கியமானது. அதுபோலவே அவற்றை ஒரு பைல் இல் திகதிப்படி க்ளிப் செய்துகொள்ள வேண்டும். அப்போது ஒரு வைத்தியரால் குறுகிய நேரத்தில் பார்த்து முடிவுகளை எடுக்க முடியும். செய்த பரிசோதனையை மீண்டும் செய்யும் சில நிலைமைகளும் தடுக்கப்படும்.

ஹிஜாமா சிகிச்சை
யூணானி மருத்துவத் துறையில் சத்திரசிகிட்சை பிரிவுக்கு உட்பட்ட,மிக முக்கியமான சிகிச்சையாக ஹிஜாமா காணப்படுகிறது. இது மருத்துவ அறிவுடன் சுத்தம் பேணி செய்யப் படவேண்டியதாகும். வெறுமனே இரத்தம் குத்தி அகற்றுவது ஹிஜாமா ஆகாது.'

மருத்துவத் தகுதி அற்றோர் சுன்னத் என்று கூறி இதை தொழிலாகச் செய்வதால், செய்யப்படுபவர்களுக்கு பல ஆபத்துக்கள் ஏற்படலாம். இலங்கையில் பலர் இறந்தும் போனார்கள்.  முறையான சுத்தம் பேனப்பட்டு, உரிய முறையில் செய்துகொள்ளப்படும் ஹிஜாமா மூலம், வர இருக்கும் நோய்களையும் தடுப்பதோடு, இருக்கும் நோய்களை சுகப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியும் . 

இரத்தத்தில் உள்ள கழிவுப் புறதங்கள் ( Degenarativi protiens ), நச்சு உலோகத் தாதுக்கள் (Heavy matals ), இறந்த கலங்கள் (Dead cells )  இன்னும் நச்சுகள் (toxic substances ) என்பன கனிசமான அளவு அகற்றப் படுவதால், நோய் எதிர்ப்புத் தன்மை மேம்பட்டு, ஆரோக்கியம் அதிகரிக்கிறது.

 இன்னும் ஒரு முக்கியமான விடயம், ஆங்கில மருந்துகள் பாவிப்போர், அத்தோடு ஆயுர்வேத மருந்துகளை பாவிக்கலாமா என்பது. நிச்சயமாக அநேக மருந்துகள் பாவிக்கப்பட முடியுமானவைதான் . ஆனால் நேர இடைவெளி தேவை.  ஆங்கில மருந்துகளை எடுத்து குறைந்தது 30 நிமிடங்களா வது தாண்டாமால்  மூலிகை மருந்துகள் எடுக்கக் கூடாது. அதேபோல ஆங்கில மருந்துகள் எதையும் திடீரென நிறுத்தவும் கூடாது. மருத்துவ ஆலோசனையின் படி,அவற்றை மெது மெதுவாக குறைத்து நிறுத்தப் பட முடியும்.

இதுபோலவே ஆயுர்வேத அல்லது ஆங்கில எந்த மருந்தையும் வைத்தியரின் பரிந்துரையின்றி சுயமாகப் பாவிக்கக் கூடாது. விளம்பரங்களை பார்த்து அல்லது யூடியூப் பார்த்து மருந்துகளை பாவிப்பதோ ஓடர் செய்வதோ, பணம் கொடுத்து நோயை தேடுவதாகவே  அமையும்.  

எனவே மேலே குறிப்பிட்ட தகவல்களை கருத்தில் கொண்டு செயல்படுவோம்.

DR. Ajmal hassan 
BUMS (university of colombo ).



 



Post a Comment

Previous Post Next Post