Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-68


345. வினா : பேடி கையில் வாளெடுப்பது போன்றது எது?
விடை : முயற்சி இல்லாதவன் செய்யும் உதவி 
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும்.(614)

346. வினா : 'தன் உறவினரைத் தாங்கும் தூணாவான்' யார்?
விடை: இன்பம் விரும்பாது, செயல் உறுதி மிக்கவன்
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்.(615)

347. வினா : எது நமக்குப் பழி ஆகும்?
விடை : அறிய வேண்டியவைகளை அறியாதிருப்பது 
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி.(618)

348. வினா : கூலி தரும் எது?
விடை: முயற்சி
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.(619)

349, வினா : விதியையும் வெல்ல முடியும் யாரால்?
விடை: சோர்வின்றி உழைப்பவர்களால் 
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.(620)

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments