
இவ்வாறு அத்தெய்வத்திருக்குறளை, திருவள்ளுவர் முடித்ததும், அங்கமர்ந்திருந்த வேந்தன் உக்கிரப் பெருவழுதி, கபிலர், பரணர், நக்கீரர், ஔவையார் முதலானோரெல்லாம். வள்ளுவரால் அருளிச் செய்த திருக்குறளையும், வள்ளுவரையும் வியந்து பாராட்டி ஒவ்வோர் வெண்பாப் பாட்டுப் பாடினர்.
இப்பொழுது நம்மால் காணப்படுகின்ற வள்ளுவ மாலையில், அவர்கள் பாடிய வெண்பாப் பாட்டுகளுடன் மற்றையோர் பாடிய வெண்பாக்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் அவை எழுதிய ஒரு சிலரைத் தவிர ஏனையோர் எல்லாம், பிற்காலத்தில் வாழ்ந்த புலவர்கள். இப்புலவர்கள், திருக்குறள் மீது வைத்த மதிப்பால், வள்ளுவரைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் எழுதியுள்ளனர்.
இந்த வள்ளுவ மாலையில் இருந்து சில சந்தேகங்கள் நமக்கு எழவே செய்கின்றன. இது குறித்து விளக்கமாக இந்நூலில் அடுத்த பகுதியில் காண்போம்.
மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரும். செங்குட்டுவன் மேல் ஐந்தாம் பத்துப் பாடிய பரணரும் நீண்ட ஆயுள் பெற்று, நெடுநாள் இருந்தனர் எனத் தோன்றுதலால், அவர்கள் சேரன் செங்குட்டுவன் காலம் வரை இருந்தனர் எனக் கூறுதல் குற்றம் ஆகாது. எனில், பரணரும், சாத்தனாரும் வள்ளுவருடன் இருந்த காலத்தே. இவர்களுக்கு இருபத்து நான்கு, இருபத்தாறு அசுவை இருந்திருக்கலாம் என்று உரைப்பதும் தவறு ஆகாது.
சாத்தனார், மணிமேகலை எனுங்காப்பியம் இயற்றிய காலத்து, கூடல் மாநகரான மதுரையில் கடைச்சங்கம் சிதைந்து போயிற்று என்பதற்கு, அவரோடு உடன் இருந்து சிலப்பதிகாரம் செய்தருளிய இளங்கோவடிகள் தமது சிலப்பதிகாரத்தில் சங்கம் பற்றி ஏதும் கூறாமையே ஒரு நல்ல சான்றாகும்.
கடைச் சங்கக் காலத்து மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதிக்குப் பின் வந்த ஆரியப் படை தந்த பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில், செந்தமிழ் வளம் குன்றி இருந்தது என்பதற்கு, எல்லாரும் கல்வி பயிலல் வேண்டும் என்று வற்புறுத்தி பாண்டியன் உரைத்தப் பாடலின் வாயிலாக நாம் அறியலாம்.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments