
சஹாரா பாலைவனம் பற்றி நாம் நினைக்கும் போதெல்லாம் நமது நினைவுக்கு முதலில் வருவது பரந்த மணல் பரப்புகளும், கடுமையான வறட்சியும் தான். ஆனால் இந்த பாலைவனம், ஒரு காலத்தில் நீரும் பசுமையும் கொண்டதாக இருந்தது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. இயற்கை காலநிலை சுழற்சிகள், காலநிலை மாற்றம் மற்றும் மனித செயல்பாடுகள் பாலைவனத்தை மீண்டும் ஒரு பசுமையான நிலப்பரப்பாக மாற்றும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, சஹாரா பாலைவனம் வறண்ட நிலமாக இல்லை. அதில் ஆறுகள், ஏரிகள் மற்றும் பசுமையான புல்வெளிகள் இருந்தது என்றும், அப்போது ஆப்பிரிக்க ஈரப்பதமான காலமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. பண்டைய பாறை ஓவியங்கள் மற்றும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் சஹாராவில் ஒரு காலத்தில் உயிர்கள் செழித்து வளர்ந்தன என்ற கூற்றை ஆதரிக்கின்றன. பூமியின் காலநிலை மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையை பாதிக்கும் இயற்கை சுழற்சிகளை அனுபவிக்கிறது.
பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக ஏற்படும் இந்த சுழற்சிகளில் ஒன்று, பல்வேறு பகுதிகளால் பெறப்படும் சூரிய ஒளியின் அளவை மாற்றுகிறது. நாம் மற்றொரு ஈரப்பதமான கட்டத்தை நெருங்கி வருகிறோம். இது சஹாராவில் மழைப்பொழிவை அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்மொழிகின்றனர். இது நடந்தால், பாலைவனத்தின் சில பகுதிகள் படிப்படியாக மீண்டும் பசுமையாக மாறக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மேலும், தீவிர வெப்பநிலை அருகிலுள்ள நீர்நிலைகளில் இருந்து ஆவியாவதைத் தீவிரப்படுத்துகிறது. இதனால் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. இந்த சுழற்சி பாலைவனத்தில் அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுக்கும். இதுபோன்ற பல கணிக்க முடியாத விளைவுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சஹாரா மீண்டும் பசுமையாக மாறும் என்ற கருத்து புதிரானதாகவே இருக்கிறது. அதன் சாத்தியக்கூறுகளும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
இத்தகைய மாற்றத்தை அடைய முடியுமா? என்பதை தீர்மானிக்க ஆராய்ச்சியாளர்கள் பாலைவனத்தின் வரலாறு மற்றும் சாத்தியமான எதிர்காலத்தை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. சஹாரா மீண்டும் பசுமையாக மாறினால், அது வரலாற்றில் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மாற்றங்களில் ஒன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments