
இந்நூல் வெளியீட்டு விழாவின்போது பேசிய வைத்தியர் ஷாபி,
தனக்கு நிகழ்ந்த அசம்பாவிதங்களில் நல்ல பக்கங்களை மட்டும் தான் எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டதுடன், இந்த நூலும் அவ்வாறான நல்லதொரு பக்கம் என்றும் கூறினார்.
கடந்த ஏபரல் மாதம் 4ம் திகதி தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் 'கர்ப்பப் பை யுத்தம்’ (‘ජාතිවාදය ඇවිස්සූ ගර්භාෂ යුද්ධය’)
நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நூலை, ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் நிமல் அபேசிங்க எழுதினார்.
விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய வித்தியாரத்ன பிரிவெனா கல்லூரியின் கலாநிதி தியகடுவ சோமானந்த தேரர் அவர்கள், கடந்த காலங்களில் சில மதகுருமார்களும் இனவாத கருத்துக்களை தூண்டினார்கள் எனவும் மக்களிடமிருந்து இனவாத கருத்துக்களை அகற்ற கலையும் இலக்கியமும் பிரதான பங்கு வகிப்பதாகவும் அதற்கு இவ்வாறான நூல்கள் முன்னுதாரணமாக அமையும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையில் மதத் தீவிரவாதம் ஆழமாக வேரூன்றிய உள்ளதாகவும் அதற்கு டாக்டர் ஷாபியின் சம்பவம் சாட்சியாகும் எனவும் ஆண்டன் சார்ள்ஸ் தோமஸ் பாதிரியார் தனது உரையின்போது குறிப்பிட்டார்.
பொய்யான வழக்கு சோடிக்கப்பட்டு, டாக்டர் ஷாபி சிறையில் அடைக்கப்பட்டது தற்காலத்தில் நடைபெற்ற வேதனையான நிகழ்வாகும் என சட்டத்தரணி துலான் தசநாயக்க உரையாற்றும்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலதிகக் கல்வி பணிப்பாளர் வசந்தி திசாநாயக்க தனது உரையின்போது, இந்தக் காலகட்டத்தில் வைத்தியர் ஷாபியும் அவரது பிள்ளைகளும் அனுபவித்த மன வேதனை பற்றியும், இந்த சம்பவம் டாக்டர் ஷாபியின் பிள்ளைகளின் கல்வியை எவ்வளவு பாதித்தது என்பது பற்றியும் நினைவு கூர்ந்தார்.
குறிப்பிட்ட சில ஊடகங்கள் இனவாத கருத்துக்களை சமூகமயப்படுத்தியதன் மூலம் அரசியல் வியாபாரத்துக்கு ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் எவ்வளவு தூரம் உடந்தையாக இருந்துள்ளனர் எனச் சுட்டிக்காட்டியதோடு.முழு நாடுமே வைத்தியர் ஷாபியின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு நூல் சிங்கள சமூகத்திலிருந்து சிங்கள மொழியில் வெளியிடப்படுவது மகிழ்ச்சிதரும் விடயமாகும்!

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments