Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-1


1.கடவுள் வாழ்த்து

குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

அகரம் மொழிக்கு முதலாம்! இறையோ உலகின் முதலென்றறி.

குறள் 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்,

கற்றும் பணிவின்றி சான்றோர்முன் பண்பிழந்தால் சற்றும் பயனில்லை சாற்று.

குறள் 3
மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.

மலர்போன்ற உள்ளத்தில் என்றும் நிறைந்து கலந்தவரைப் பின்பற்று வோர்கள் பாரில் நிலைத்தேதான் வாழ்வார் உணர்.

குறள் 4:
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல

வேண்டியோர் வேண்டாதோர் பாராத சான்றோரைப் போற்று, துயரில்லை இங்கு

குறள் 5
இருள்சேர் இருவினையும்சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைநிலை வேண்டுவோர் நன்மைதீமை தன்னை சமமாய்க் கருதுவர் காண்.

குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.

நெறிபிறழ்வே இன்றியே ஐம்புலனை ஆட்கொள்! ஒழுக்கம் நிமிரவைக்கும் சொல்

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

இணையற்ற சான்றோர் வழிநடந்தால் தீரும் மனக்கவலை மக்களுக்குத் தான்.

குறள் 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.

அறக்கடல் சான்றோரைப் போற்றுவோர் துன்பக் கடலையோ நீந்தல் எளிது.

(தொடரும்) 

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments