Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-23


குறள்
116:
கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொரீ இ அல்ல செயின்.

நடுநிலை விட்டுப் பிறழ்வதே இங்கே கெடுதிக்(கு) அறிகுறி யாம்.

குறள் 117:
கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

நடுநிலைப் பண்பாளர் தாழ்வினை என்றும் கெடுதியாகப் பார்க்கா(து) உலகு.

குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி.

துலாக்கோலைப் போல நடுநிலை போற்றல் உலகிலே சான்றோர் சிறப்பு.

குறள் 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்.

உள்ளம் ஒருபக்கம் சாயாமல் நீதியைக் காப்பதே நல்லோர் நடுநிலை யாம்.

குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.

நுகர்வோர்போல் எண்ணி வணிகத்தைச் செய்தல் வணிகநெறி யாகும் உணர்

(தொடரும்) 

 


Post a Comment

0 Comments