
கனடாவின் மேற்குப் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதில், ஏழு பேர் உயர்நிலைப் பள்ளியில் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் ஒரு வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக அங்குள்ள போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொழும்பியாவின் டம்ப்லர் ரிட்ஜ் பகுதியில் நடந்த இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பானவர் என சந்தேகிக்கப்படும் நபரும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக கனடா அரச மவுண்டட் போலீஸ் (RCMP) தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் RCMP வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் டம்ப்லர் ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கி ஏந்திய நபர் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
போலீஸார் பள்ளியைச் சோதனை செய்தபோது, சந்தேகநபரைத் தவிர, ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டனர். பள்ளியில் சுடப்பட்ட ஏழாவது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
“இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டாவது இடத்தைப் போலீஸார் கண்டறிந்துள்ளனர். அங்கு ஒரு வீட்டில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனடா ஊடகங்கள், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒரு பெண் என தெரிவித்திருந்தாலும், RCMP இதுகுறித்த விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“பள்ளி நிர்வாகம், அவசர சேவைப் பணியாளர்கள், பொதுமக்களின் விரைவான ஒத்துழைப்பு எங்களின் நடவடிக்கைக்கு முக்கிய பங்காற்றியது,” என்று RCMP வடக்கு மாவட்டத் தளபதி கேன் ஃப்ளாய்ட் தெரிவித்தார்.
டம்ப்லர் ரிட்ஜ், பிரிட்டிஷ் கொழும்பியாவின் மிகப் பெரிய நகரமான வான்கூவரின் (Vancouver) வடக்கே சுமார் 1,100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments