Ticker

6/recent/ticker-posts

பாரிஸில் பதற்றம்: கத்தி ஏந்திய நபர் போலிசார் சுட்டுக் கொலை


பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆர்க் டி திரியோம்ப் வெற்றி நினைவுச்சின்னம் அருகே ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரை போலிசார் சுட்டுக் கொன்றனர்.

போலிசாரின் தகவலின்படி, கத்தி ஏந்திய அந்த நபர் பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கி முன் வந்ததாகக் கூறப்படுகிறது.

எச்சரிக்கை விடுத்தபோதும் அவர் பின்னடையாததால், போலீசார் துப்பாக்கி சூட்டை நடத்தினர். காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவத்தின் பின்னணி குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

nambikkai


 


Post a Comment

0 Comments