Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-30


குறள் 150:

அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.

பிறன்மனை நாடும் செயலோ அறத்தின் நெறிமறத்தல் வாழ்வினும் தீது.

பொறையுடைமை

குறள் 151:

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

அகழ்ந்தெடுத்தும் நம்மையே தாங்கும் நிலம்போல் இகழ்வாரை நாம்பொறுத்தல் பண்பு,

குறள் 152:

பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை மறத்த லதனினும் நன்று.

பொறுப்பதைக் காட்டிலும் தீங்கிழைத்தால், தீங்கை மறப்பதே பண்பட்டோர் சால்பு.

குறள் 153:

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.

வன்கொடுமை ஏழ்மை! வலிமையோ பண்பற்றோர் செய்யும் செயல்பொறுத்த லாம்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments