
சான்றாண்மை
குறள் மொழி 50
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
குறள் எண் : 987
குறள் மொழியின் பொருள் :
தனக்குத் துன்பம் செய்தவருக்கும். நம் பொறுமைப் பண்பால், மன்னிக்கும் குணத்தால் நாம் அவர்களுக்கு நன்மை செய்யவில்லை என்றால், நமக்குப் பெருந்தன்மை இருந்தும் பயனில்லை.
நபிமொழி:
மன்னித்தல், பொறுத்தல் உயரிய பண்பு. தனக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம்... "தமது வேலைக்காரனை எத்தனை முறை மன்னிக்கப்பட வேண்டும்? என்று நபிகள் நாயகத்திடம் கேட்கப்பட்ட போது. தினமும் எழுபது முறை என்று பதில் அளித்தார்கள்."
(ஆதாரம்:நூல் - அபூதாவூத்)
தீ நட்பு
குறள் மொழி 51
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது.
குறள் எண்:811
குறள் மொழியின் பொருள் :
நம்மீது அன்பை செலுத்துபவர் போலத் தோன்றினாலும், கெட்ட குணம் உள்ளவர். நல்ல பண்பு நலன்கள் இல்லாதவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளாமல் அதை நாம் குறைத்துக் கொள்வதே நன்மையை உண்டாக்கும்.
நபிமொழி :
நல்ல பண்புநலன்கள் மிக்கவரை நண்பராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்...!!. காரணம், கெட்ட நண்பன். உலை ஊதுகின்றவனைப் போன்றவன். அவன் உனது ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது அவனிடமிருந்து துர்வாடையானது அவனை அடைந்தே தீரும்..!
நபிகள் நாயகம் (ஸல்)
ஆதாரம் : புகாரி - முஸ்லிம்
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments