Ticker

6/recent/ticker-posts

மத்தியக் கிழக்குப் போர்; ஹார்முஸ் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் டொனால்ட் டிரம்ப் பேச்சு


ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்திவரும் போரால் உலக அளவில் பொருளாதார சிக்கல் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய், மூலப் பொருட்கள் உள்ளிட்டவை தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினை இருந்து வரும் சூழலில், பெட்ரோல், டீசல் பிரச்சினை இதுவரை வரவில்லை. இந்தச் சூழலில் மேற்கு ஆசியா போர் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியிருந்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தற்போது ஏற்பட்டுள்ளது மிகவும் இக்கட்டான சூழல். ஆனாலும் கூட அரசு இயந்திரத்தின் அத்தனை சக்கரங்களும் சுழன்று சுழன்று வேலை பார்க்கிறது.

இந்த இக்கட்டான சூழலில் அரசுடன் மக்களும் துணை நிற்க வேண்டும். ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது என்பது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மூடப்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர், செர்ஜியோ கோர், அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தையில், மத்தியக் கிழக்குப் போர் குறித்து பேசியுள்ளனர். குறிப்பாக ஹார்முஸ் நீரிணை திறந்துவைப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பேசியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

news18


 


Post a Comment

0 Comments