
அமெரிக்காவுடனான நீண்டகாலப் போருக்கு ஈரான் தயாராக இருப்பதாகவும், அமெரிக்காவை பின்வாங்கச் செய்ய வளைகுடா நாடுகள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
ஈரானின் உயரிய தலைவரின் அலுவலக வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் கமல் கராசின், சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் "இனி இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியான அழுத்தம் அதிகரிக்கும் போது மட்டுமே இந்தப் போர் முடிவுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நிறுத்த மற்ற நாடுகள் தலையிடும் வரை இந்தப் போர் தொடரும் என சுட்டிக் காட்டியுள்ளார்.
அமெரிக்காவைப் போரிலிருந்து பின்வாங்கச் செய்யுமாறு வளைகுடா அரபு நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதே ஈரானின் தற்போதைய தந்திரோபாயமாக உள்ளது என்றும் ஈரானின் உயரிய தலைவரின் அலுவலக வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் கமல் கராசின் குறிப்பிட்டுள்ளார்.
hirunews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments