
சாயங் காலவேளையிலே
சாலையோரப் பூங்குயிலே .
சாய்ந்தாடுகிறாயே வண்ணமயிலாய்
சாந்துப்பொட்டு பெண்மயிலே .
சாரைப்பாம்பு வளைவாகவே
சாமந்துக் காற்றாகவே .
சாரலில் ஆடும்
சாதிமல்லிப் பூச்சரமே .
மயங்கியே போனேனடி
மனசுக்குள் மாமனானே .
மந்தாரப் பூவே
மடிசாயவே வேணுமடி .
மல்லிகைச் சிரிப்பாலே
மணக்கிறாயே நெஞ்சுக்குள்ளே .
மரக்கத்தான் முடிந்திடுமோ
மரகதமே உனதழகினை .
அள்ளியணைத்திட வரவோ
அல்லிமலரே சொல்லடி .
அன்பான வாழ்க்கையிலே
அலையாகிடுவோம் வாருமடி
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments