Ticker

6/recent/ticker-posts

போதைப்பொருள் கடத்தல்: ’நோனா’வுக்கு ஆயுள் தண்டனை


18 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் அதனை விநியோகித்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாயொருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன ஆயுள் தண்டனை விதித்து (17)  தீர்ப்பளித்தார்.

பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம். சுவர்ணமாலி அல்லது 'நோனா' எனப்படும் பெண்மணிக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் பொரளை பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

  நாட்டில் மிக மோசமாகப் பரவியுள்ள போதைப்பொருள் கடத்தல் காரணமாக, இளைஞர் சமூகம் பாரிய அழிவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். இத்தகைய சூழலில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

 பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு வழக்கறிஞர் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களால் நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்கள் சீரழிந்து வருவதால், இக்குற்றத்தைச் சாதாரணமாகக் கருத முடியாது என அரசுத் தரப்பு சட்டத்தரணி வாதிட்டார்.

இக்குற்றமானது மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு பாரிய குற்றமாகும் என்பதால், பிரதிவாதிக்கு அதிகபட்ச தண்டனையை வழங்குமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்தி, பிரதிவாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்

tamilmirror


 


Post a Comment

0 Comments