Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-32


குறள் 159:

துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

கொடியோரின் சொற்களை ஏற்றுப் பொறுப்போர் துறவிகளுக் கொப்பாவார் சொல்.

குறள் 160:

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொ னோற்பாரிற் பின்.

தன்பசி தாங்கியே நோன்பிருப்போர் எல்லோரும் வன்சொல் பொறுத்தார்க்குப் பின்.

17.அழுக்காறாமை

குறள் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு.

அழுக்காறை உள்ளத்தில் ஏற்காத பண்பாம் ஒழுக்க நெறிகளைப் போற்று.

குறன் 162:

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்

ஒருவ ரிடமும் பொறாமையற்ற பண்பே பெருமைக் குரியநற் பேறு.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments