
குறள் 163:
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணா தழுக்கறுப் பான்.
அறநெறிச் செல்வத்தை வேண்டாதான் இங்கே பொறாமை அடைவான் தகித்து.
குறன் 164:
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக் கறிந்து.
நெறிபிறழ்ந்தால் துன்பம் வருமென் றறிந்தோர் பொறாமைச் செயல்தவிர்ப்பார் கூறு.
குறள் 165:
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் வழுக்கியுங் கேடீன் பது.
பொறாமை படைத்தோர்க்கு வேறுபகை உண்டோ? பொறாமையே வீழ்த்தும் உணர்.
குறள் 166:
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉ மின்றிக் கெடும்.
கொடுப்பதைப் பார்த்துப் பொறுக்காதோர் சுற்றம் உடையுண வின்றிக் கெடும்.
குறள் 167:
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவன் தவ்வையைக் காட்டி விடும்.
உள்ளம் பொறாமை வசப்பட்டால் செல்வமோ ஏழ்மைக்கு வாய்ப்பளிக்கும் சொல்,
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments