Ticker

6/recent/ticker-posts

தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: சமூக வலைதள வதந்திகளால் யாத்ரீகர்களிடையே குழப்பம்


காபாவைச் சுற்றி புகைப்படங்களை எடுக்கும் யாத்ரீகர் SR10,000 வரை அபராதம் விதிக்கப்படுவார்கள் என்று சமூக ஊடகங்கள் மூலம் வைரலாகும் கூற்று உண்மையல்ல என்று மலேசிய யாத்ரீகர்களின் குழுத் தலைவர் முஹம்மத் ஹிஷாம் ஹருன் கூறியுள்ளார்.

இதுவரை அத்தகைய விதி எதுவும் விதிக்கப்படவில்லை என்றும், புனித மசூதியைச் சுற்றி புகைப்படங்களை எடுக்க யாத்ரீகர் இன்னும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், இருப்பினும் அவர்கள் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளித்து வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது அதைச் செய்யக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

"புகைப்படங்களை எடுப்பது ஒரு குற்றமல்ல, ஆனால் வழிபாட்டில் ஈடுப்படும்போது அதைத் தவிர்க்கவும், ஏனெனில் அந்தச் செயல் மற்ற யாத்ரீகர்களின் கவனத்தைச் சீர்குலைக்கும்" என்று இங்கு நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தவறான தகவல் பரவுவது தவறான புரிதலின் விளைவாக நம்பப்படுவதாகவும், இது பயணிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் முஹம்மத் ஹிஷாம் தெரிவித்தார்.

அதன்படி, துல்லியமான தகவல்களைப் பெறுவதற்கு, பயணிகள் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள், தாபுங் ஹாஜி ஊழியர்களைக் குறிப்பிடுமாறும், புனித யாத்திரையில் இருக்கும் போது வழிபாட்டில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார் அவர்.

இதற்கு முன்னர், காபாவின் முன், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை எடுக்கும் எவருக்கும் சவூதி அரேபியா அதிகாரிகள் SR10,000 (சுமார் 10,500 ரிங்கிட்) அபராதத்தையும், தடுத்து வைத்து, அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதையும் விதிப்பார்கள் என்று செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

nambikkai


 


Post a Comment

0 Comments