
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் இன்று இருபோட்டிகள் நடக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 37-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.
சென்னை அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றது. குஜராத் அணி 7 போட்டிகளில் விளையாடியதில் 3-ல் வெற்றியை ருசித்துள்ளது.
இரு அணிகளும் 4-வது வெற்றியை ருசிக்க கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியதில் தலா 4 வெற்றியை பதிவு செய்துள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை குவித்தது.
அதனை தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய குஜராத் அணி அதிரடியாக விளையாடி இறுதியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் குஜராத் அணி 4 வெற்றியை பதிவு செய்ததுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments