Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-36


குறள் 177:

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்.

மாற்றார் பொருளைக் கவர்ந்து வளம்பெற்றால் அப்பயன் தீமை தரும்.

குறள் 178:

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்.

தன்செல்வம் குன்றா திருக்கப் பிறர்பொருளை என்றும் கவராமல் வாழ்.

குறள் 179:

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே திரு.

பிறர்பொருள்மேல் ஆசையற்ற பண்பே அறமாம்! அவர்நாடி செல்வம் வரும்.

குறள் 180:

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

பிறர்பொருள் ஆசை அழிவதான்!! ஆசை புறக்கணித்துச் சேர்த்தால் வளம்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments