
வெஃகாமை
குறள் 171:
நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும்.
பிறரின் பொருளைக் கவர்ந்தால் குடும்பம் அழியும்! பெருகிவரும் தீது.
குறள் 172:
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்.
கவர்தல் பழிச்செயல் என்றேதான் அஞ்சித் தவிர்ப்பார் நீதிமான் இங்கு.
குறள் 173:
சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர்.
இன்பம் கிடைக்கிற(து) என்றே அறம்பிறழ்ந்து பண்புள்ளோர் ஏற்கமாட்டார் கூறு.
குறள் 174:
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர்.
புலனடக்கம் கொண்டோர் வறுமையில் கூட பிறர்பொருள் நாடமாட்டார் கூறு.
குறள் 175:
அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின்.
மற்றவர்க் குள்ள பொருளைப் பகுத்தறிவு பெற்றோர் கவரமாட்டார் கூறு.
குறள் 176:
அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்.
அருள்நாடும் இல்லறத்தான் மாற்றான் பொருளைக் கவர்ந்தால் அழிந்திடுவான் காண்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments