Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-39


பயனிலசொல்லாமை!

குறள் 191:

பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.

எல்லோரும் கேட்டு முகஞ்சுழிக்கப் பேசுவோரை எல்லோரும் தூற்றுவார் சொல்.

குறள் 192:

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கட் செய்தலிற் றீது.

பலர்முன் பயனற்ற சொல்பேசல், நட்பைக் கலைக்கின்ற தீமையினும் கீழ்.

குறள் 193:

நயனில னென்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை.

பயனற்ற சொல்லை விரித்துரைப்போன் நீதி தவறுவோன் என்றுணர்த்தும் சொல்.

குறள் 194:

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து.

பலரிடம் பண்பும் பயனுமற்ற சொல்லை விளம்புதல் நன்மைக்குத் தீது.

குறள் 195:

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.

பார்போற்றும் சான்றோர் பயனற்ற சொல்சொன்னால் வேரோடும் நன்மதிப்போ பாழ்.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments