
குறள் 196:
பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல்.
பயனற்ற சொற்களைப் பேசுவோனை மக்கள் பதரென்பார், மானிடராய் அன்று.
குறள் 197:
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று.
அறமற்ற சொற்களைச் சொன்னாலும் சான்றோர் பயனற்ற சொல்தவிர்த்தல் நன்று.
குறள் 198:
அரும்பய னாயும் அறிவினார் சொல்லார் பெரும்பய னில்லாத சொல்.
அரிய பயன்களை ஆயும் அறிஞர் பயனற்ற சொல்சொல்லார் பார்.
குறள் 199:
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்.
தெளிந்த அறிவுடைய மாசற்றோர் சொல்லார் பயனற்ற சொற்களைத் தான்.
குறள் 200:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.
நல்ல பயனுள்ள சொற்களைச் சொல்லவேண்டும்! இல்லையேல் சொல்லாதே இங்கு
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments