வறியார்க்கொள் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து.
வறியோர்க்(கு) ஈதலே ஈகையாம்! இன்றிப் பிறர்க்களித்தல் தன்னல மே.
குறள் 222:
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று.
பிறரிடம் வாங்குதல் நன்றல்ல! ஆனால் பிறர்க்கோ ஈதல் சிறப்பு.
குறள் 223:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள.
தனது வறுமையைக் காட்டாமல் ஈதல் மனங்கொள்தல் என்றும் சிறப்பு.
குறன் 224:
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு.
இல்லையென்று வந்துநிற்போர் இன்முகம் காணுமட்டும் தொல்லைதான் ஈவார்க்கு! செப்பு.
குறள் 225:
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவா ராற்றலிற் பின்.
வண்பசி தாங்குகின்ற நோன்பினைக் காட்டிலும் ஏழைக் குணவளித்தல் மேல்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments