
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு.
விளக்கம்:
கொடுங்கோல் அரசன் ஆட்சியின் கீழ் வாழ்வது துன்பமாகும்.
தெப்பம் இல்லாமல் ஆற்றினை நீந்திக் கடக்க முயற்சிப்பது துன்பமாகும்.
கடுஞ் சொல் பேசுபவர்களுடனான தொடர்பு துன்பமாகும்.
தடுமாற்ற மனதுடன் உயிர் வாழ்வது துன்பமாகும்.
இன்னா நாற்பது - 4.
எருதி லுழவர்க்குப் போகீர மின்னா
கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா
திருவுடை யாரைச் செறலின்னா வின்னா
பெருவலியார்க் கின்னா செயல்.
விளக்கம்:
ஏர்கள் இல்லாத போது, வயலின் ஈரப் பதம் உழவர் மனதிற்கு துன்பமாகும்.
போர்க் கருவிகள் இல்லாததால், திரும்பிப் பார்க்காமல் ஓட வேண்டிய நிலை வீரனுக்கு துன்பமாகும்.
பண வசதி உள்ளவர்களப் பகைத்துக் கொள்வது துன்பமாகும்.
வலிமை யுள்ளவர்களுக்கு கெடுதல் செய்வது துன்பமாகும்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments