Ticker

6/recent/ticker-posts

கச்சா எண்ணெய் விவகாரம்: இந்தியாவிற்கு செக் வைத்த டிரம்ப் அரசாங்கம்... வெளியான ஷாக் தகவல்!


இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, WTI எனப்படும் அமெரிக்க கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 4 சதவீதத்திற்கு மேல் குறைந்து 81 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகிறது.

அதன்படி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 15 சதவீதத்திற்கு கீழ் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வரிவிதிப்பில் இருந்து ஜப்பான், பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும் எனவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பில் விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த போரின் போது மிகவும் விலை உயர்ந்த 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வரை மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை என்றும் டிரம்ப் கூறினார்.

முன்னதாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரி விதிக்க திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

காசா முனையை மறுகட்டமைப்பதற்காக அமைதி வாரியத்தை உருவாக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், அந்த வாரியத்தின் தொடக்க கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது.

ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக இந்த மசோதாவை நிறைவேற்ற அமெரிக்க நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

news18


 


Post a Comment

0 Comments