
பிரான்ஸையும் ஸ்பெயினையும் வாட்டியெடுக்கும் காட்டுத் தீயால் இப்போது 270,000க்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
ஸ்பெயின் தலைநகர் மட்ரிட் வரலாறு காணாத மோசமான காட்டுத் தீயைச் சமாளிக்கத் திணறுகிறது.
இன்னும் மோசமான காலம் நெருங்குவதாக ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சான்ச்செஸ் (Pedro Sanchez) கூறினார்.
இதற்கிடையே, பிரான்சில் போர்டோ (Bordeaux) நகரை நெருங்கும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் போராடுகின்றனர்.
நெருப்பு மேலும் பற்றிப் பரவாமல் தடுக்க ராணுவத்தினர் ஆகாயத்திலிருந்து டன் கணக்கில் ரசாயனத்தைக் கொட்டத் தொடங்கியுள்ளனர்.
ஸ்பெயினில் இந்த ஆண்டு மட்டும் 130,000 ஹெக்டர் நிலம் காட்டுத் தீயில் பொசுங்கிப் போனது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments