Ticker

6/recent/ticker-posts

பைக்கில் குழந்தை பெற்றெடுத்த பெண்


பைக்கில் சென்று கொண்டிருக்கும்போதே குழந்தை பெற்றெடுத்த பெண் இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரது நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் பெற்று வருகிறது.

ஆஸ்பத்திரிக்கு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரி வாசலிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்து உள்ளார்.

வியட்நாம் நாட்டின் தாய் குவாங் மாகாணம் புலுவாங் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அருகில் இந்த வியக்கத்தக்க சம்பவம் அரங்கேறியுள்ளது.

வியட்நாமை சேர்ந்த 25 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் திடீரென கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து உடனடியாக அவரது கணவர் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அவசரமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆஸ்பத்திரியை அடைவதற்குள் வாசலிலேயே அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாகி, மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையிலேயே அவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இதைக் கண்ட ஆஸ்பத்திரி டாக்டர்களும், நர்சுகளும் உடனடியாக ஓடி வந்து தாயையும், குழந்தையையும் மீட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பலரது நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் பெற்று வருகிறது.

இந்த அரிதான தருணம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, லட்சக்கணக்கானோர் அதைப் பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பலரும் அந்த தாயின் தைரியத்தைப் பாராட்டியதுடன், மருத்துவ ஊழியர்கள் அளித்த உடனடி முதலுதவி இருவரின் பாதுகாப்புக்கும் முக்கிய காரணமாக அமைந்ததாக பதிவிட்டு வருகின்றனர்.

tamilmirror


 


Post a Comment

0 Comments