Ticker

6/recent/ticker-posts

இன்னா நாற்பது - 11


இன்னா நாற்பது -19.

குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா
நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா
நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா
கலத்தில் குலமில் வழி.

விளக்கம்:
  • பெருமை மிகு குடும்பத்தில் பிறந்த ஒருவன் கல்வி கற்காமல் இருப்பது துன்பமாகும். 
  • விளை நிலத்தில் பாவிய வித்துக்கள் முளைக்காமல் போவது துன்பமாகும். 
  • அழகிய பெண், நாணம் இல்லாமல் இருப்பது துன்பமாகும். 
  • மாறுபட்ட குணமுடைய இரு குடும்பங்கள், தங்களுக்குள் உறவு வைத்துக் கொள்வது துன்பமாகும். 

இன்னா நாற்பது -20.

மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா
வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா
மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா
மூரி யெருத்தா லுழவு.

விளக்கம்: 
  • மழை பெய்யும் நேரத்தில் கூவுகின்ற குயிலின் குரல் துன்பமாகும்.
  • அன்பில்லாதவர்கள் கடுமையாகப் பேசுவதைக் கேட்பது துன்பமாகும்.
  • பருவ காலத்தில் மழை பெய்யாவிட்டால் ஊருக்குத் துன்பமாகும். 
  • எருமையை ஏரில் பூட்டி உழுவது துன்பமாகும்.
(தொடரும்)

 


Post a Comment

0 Comments