Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-53


குறள் 259:

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.

பொருளிட்டு வேள்வி படைத்தலினும் ஊனை விருப்புடன் உண்ணாமை நன்று.

குறள் 260:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்.

கொல்லாமல் வாழ்வோனை ஊனை மறுப்பவனை இவ்வுலகம் சூழ்ந்து தொழும்

தவம்

குறள் 261:

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு

மற்றவர்க்குத் துன்பம் கொடுக்காமல், புண்படுத்தும் மற்றவரைத் தாங்கல் தவம்.

குறள் 262:

தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள் வது.

புலனடக்கம் கொண்டோர் தவக்கோலம் நன்றே! இலாதோர் தவக்கோலம் வீண்.

குறள் 263:

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன் மற்றை யவர்கள் தவம்.

துறவிக் குதவவேண்டும் என்றே தவத்தை மறந்தனரோ மற்றவர்கள் இங்கு?

(தொடரும்)

மதுரை பாபாராஜ் 

 


Post a Comment

0 Comments