Ticker

6/recent/ticker-posts

காத்திருப்பு இனிமையே!


காக்க வைத்தால் தனிமையே
காத்திருப்பும் இனிமையே. 
காலம் கடத்தினால் கொடுமையே
காதலியே அறிவாயோ நீ?

இதையே.

கண்கள் தேடும் உன் வரவை,
கனவுகள் கூட கேட்கின்றன
நீ வருவாய் என்ற நம்பிக்கையில்
நொடிகள் எல்லாம் நகர்கின்றன.

காத்திருப்பின் சுகம் அறிந்தேன்,
காத்திருப்பின் வலி அறிந்தேன்.
ஆனால் நீ வராத ஒவ்வொரு கணமும்
காதலே என் இதயத்தின் 
தண்டனையாகிப் போகிறதடி.

ஆர்.எஸ்.கலா


 


Post a Comment

1 Comments

  1. நன்றிகள் அண்ணா

    ReplyDelete