அன்பார்ந்த வாசகர்களுக்கு!இன்று(2021ஆகஸ்ட் 27ஆம் திகதி)வேட்டை ஐந்து வருடங்களை பூர்த்தி செய்கின்றதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழ் பேசும் வாசகர்களின் அன்பான ஆதரவுடன் இந்த மைல்கல்லை எட்டி இருப்பதையிட்டு மிகவும் பெருமையாயிருக்கின்றது.
கடந்த ஐந்து வருடங்கள் தமிழ் பேசும் மக்களின் ஆதரவு மகத்தானது.
ஆக்கங்கள் எழுதும் எழுத்தாளர்கள் வேட்டையின் நோக்கம் அறிந்து தங்களின் ஆக்கங்களை வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப எழுதி இந்த வெற்றிப் பயணத்திற்கு உறுதுணையாயிருந்தது மிகவும் மகிழ்ச்சியான விடயம் எழுத்தாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்
ஐந்து வருடங்கள் தங்கு தடையின்றி ,இனவாதம் இல்லாமல் .சினிமா ,ஆபாசம் போன்ற சமூகத்தை சீரழிக்கும் கருத்துக்களை தவிர்த்து மன நிறைவான ஒரு தமிழ் சஞ்சிகையை தமிழ் பேசும் மக்களுக்கு அளித்ததையிட்டு பெருமை அடைகின்றோம் .
ஆறாவது வருடத்தில் தடம் பதித்துள்ள வேட்டைக்கு
தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம்
இன்று உலகெங்கும் பரவியிருக்கும் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் அனைத்து மக்களுக்காகவும் படைத்தவனிடம் பிராத்திப்போம் .
நன்றி
வேட்டை ஆசிரியர்
0 Comments