Ticker

6/recent/ticker-posts

பாடாய்ப் படுத்துதம்மா!

கருவாட்டுக் கூடையில் 
வாடை நீங்கும் முன்னே
கரையோர வாசிகளின் 
வாழ்வு வாடியது கண்ணே.

ஆத்தோரம் ஆயிரம் தோப்பு
அன்றாடக் கூலியின் வாழ்விலே
ஒளிரவில்லை மத்தாப்பு. 

மரம் ஏறிப் பறித்திட 
எவையுமில்லை.
தாகம் தீர்த்திட
ஏரியிலே ஊற்றுமில்லை.

நாளும் பொழுதும் 
நாட்டுக்குள்ளும் தொல்லை.
நாளாபுறமும் மறுப்பு எல்லை.

வாழ்வோ வறுத்த மல்லி
வாசம் பறந் அல்லி  
காரணம் தான் என்ன 
பொல்லாத நுண்ணுயிர் கிருமி
பாடாப் படுத்துதம்மா வள்ளி .

Post a Comment

0 Comments