23வது கொடகே தேசிய சாகித்திய விருது-2022

23வது கொடகே தேசிய சாகித்திய விருது-2022

கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப்  பிரதிப் போட்டி-2020
விருதுகள் வழங்கும் விழா
23வது கொடகே தேசிய சாகித்திய விருது-2022 விழாவும், கொடகே தேசிய 2020 க்கான தமிழ் ஆக்க இலக்கியப்  பிரதிப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் பெப்பரவரி 2 ந்திகதி புதன்கிழமை  பிற்பகல் 2.30மனி கொழும்பு-7 யில் அமைந்துள்ள  கொழும்பு பொது நூலகத்தில்  சுகாதார விதிகள் படி நடைபெறும். இந்த நிகழ்வில் 23வது கொடகே தேசிய சாகித்திய விருது-2021க்கான  விருதுகளாக மல்லிகை சி.குமாரின் “வேடத்தனம்‘  எனும் சிறுகதைத் தொகுப்புக்கும், வெலிமடை ரபீக்கின்  “ ஒரு நானும் இன்னும் ஒரு நானும் ‘ எனும் கவிதைத் தொகுப்புக்கும், மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது சிங்களத்திலிருந்து எம்.ரிஷான் ஷரீப்   தமிழில் மொழிபெயர்த்தட  கத்யானா அமரசிங்ஹ வின் தரணி- எனும்  நாவலுக்கும்  ,முதல் நூல் நூலுக்கான விருதினையும் ஆ.லெ.மு.இர்ஷாத்தின் ஒளி பூக்கும் இரவு எனும் ஹைக்கூ தொகுதிக்கும்  வழங்கப்படும்...

2020க்கான கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப்  பிரதிகளுக்கான போட்டியில் -சிறந்த  சிறுதைத்  தொகுப்பாக தெரிவு  செய்ய்ப்பட்ட பாலரஞ்சனி  ஜெயபாலின் ' நெத்திக்காசு' எனும் தொகுப்புக்கும், சிறந்த கவிதைத் தொகுதியாக தெரிவு செய்யப்பட்ட  ஜன்ஸி கபூரின் ' பிறப்பிட  நிழலிலே' எனும் தொகுப்புக்கும் விருதுகள் வழங்கப்படும், மற்றும் ஆங்கில, சிங்கள நூல்களுக்கும் விருதுகள் வழங்கப்படும்.

சுதார விதிகள்படி நடைபெறும் விழா மட்டுப்படுத்தப்பட்ட அழைப்பாளர்களை கொண்டு இவ்விழா நடைபெறும்.
தகவல்;மேமன்கவி


வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com  

Post a Comment

Previous Post Next Post