புது வருடமும் கண்ணீரால் கடந்து போகுமோ?

புது வருடமும் கண்ணீரால் கடந்து போகுமோ?


பாச்சோறு இல்லாது போனாலும் 
பட்டினிச் சாவுயில்லாத 
வருடமாக வருக,வருக 
 
புதுவருடம் மலர்கின்ற நாள் 
மனிதகுலம் மடிகின்ற நாளாகுமோ?
புது வருடமும்  
கண்ணீரால் கடந்து போகுமோ? 
 
புது வருடம்  
விலைவாசியற்ற காலமாகுமா? 
விவசாயிகள்
வீதியில் அலையும் காலமாகுமோ?

கொரோனா என்கின்ற 
கொடிய தொற்றால் 
நம்நாடு
தோற்றுப்போனதோ?

பச்சோந்திகள் பங்காளிகளாக 
இணைந்து நம்
நாட்டை நாசமாக்கி 
விட்டார்களோ?

சோதனைகள் ஒருபோதும் 
பிராத்தனையால் வருவதில்லை
சோரம் போனவர்களால் 
வரும் சோதனையாகும். 

Post a Comment

Previous Post Next Post