விதவைக்கு வாழ்வில்லையா?

விதவைக்கு வாழ்வில்லையா?


இத்தரையில் திருமணத்தால்
இனிமையொருகுடும்பமென
புத்தியுடன் வாழ்ந்திருந்தேன்
புகழிறையினருளாலே

கூழ்குடித்துழைத்து வந்த
குணத்தோராமென்கணவர்
ஆழ்துயரிலெனை விட்டு
அல்லாஹ்விடம் சேர்ந்திட்டார்
  
பிள்ளைகள் மூவருடன்
பரிதவிக்குமென்நிலையை
உள்ளன்போடணைத்து
உதவிடுவார் யாருமில்லை
   
பாயிழைப்பேன் புல்பிடுங்கி
பலதொழில் செய்திடுவேன்
ஆயினும்தான்செலவுகளை
அடைத்துயர முடியவில்லை
      
ஓலையுள்ள யென்வீடு
ஓட்டைகளுமுடைசல்களும்
சாலையதோ பெருந்தெருக்கள்
சார்ந்திருப்போர் மாடிகளில்

கைநீட்டியுழைத்து வாழ
கைம்பெண் நான்முயலவில்லை
பைநிறையவுள்ளோர்கள்
தொழில்செய்ய உதவுவரோ
     
விதவைக்கு வாழ்வளித்த
வள்ளலெம் பெருமானின்
இதமுள்ள சமுகம் நாம்
இதைமறந்து வாழ்வதென்ன
   
வாழ்வில்லையென்றாலும்
வனிதைநான் தொழில்செய்து
ஏழ்மையைப்போக்கியென்
பிள்ளைகள் கற்றிடவும்
     
குணமொன்றைக்காட்டுங்கள்
குணமுள்ள செல்வந்தரே
பிணமானால்இறையும்மைப்
பிடித்திடுமுன்னுதவிடுவீர்


-----------------------------------------
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
       Email-vettai007@yahoo.com         

Post a Comment

Previous Post Next Post