பிறையோடு நிலா!

பிறையோடு நிலா!


ஒவ்வொரு
படிகளையும்
தொட்டுச் செல்கின்றன
தாய்மையும்
சேய்மையும்...!

நிலாக்கள்
நீருற்றிய பாதையில்
வலம் வருகின்றன...!

தாமரை
கரம்பிடித்த அல்லி
புத்தாடை போர்த்திக் கொண்டு
முன்னேறுகிறது
வானை நோக்கி....!

அனைத்து
பாதச்சுவடுகளிலும்
அன்பின் நீர்த்துளிகள்
பருகிச் செல்கின்றன
ஈரம் சுரக்காத
பாறைகள்....!

முன்பின் தெரியாத
பலருக்கு பின்பக்க 
விதிமுறைகளை மட்டும்
அழகியல் சொல்லி நடக்கிறது
கண்களுக்கு காதல் விருந்தாய்......!

தாயும் சேயுமாய்
அன்புகள் ஆங்கே 
நடைபயணம்.....!


Post a Comment

Previous Post Next Post