ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்


#போதிமரத்து இலைகளுடன்
சேர்ந்தே உதிர்ந்தன
எறும்புகள்

#எடைக்குப் போட்ட
புத்தகங்களில் இருக்கின்றன
வாழ்வியல் தத்துவங்கள்

#முதியவரின் ஊன்றுகோலில்
ஒளிந்திருக்கிறது
தனிமைப்படுத்திய அவலம்

#திசைகள் நான்கினை
எட்டாக்கியும் காணவில்லை
மனிதநேயம்

#பொருள் நிறைந்த பூமியில்
இன்பம் பொங்கி வழிகிறது
அறம் பொசுக்கப்படுகிறது

#எல்லைகளற்ற ஆசையில்
மூழ்கிய மனிதம் தவிக்கிறது
எளிமை இல்லாது போனது 

#கொளுத்திய சூளையில் 
செங்கற்களோடு வேகிறது 
சிறார் தொழிலாளர் கல்வி 


வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com  


1 Comments

  1. தொடர்ந்து எம்முடைய கவிதைகளை வெளியிடும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
Previous Post Next Post