நன்றி சொல்ல வேண்டும்!

நன்றி சொல்ல வேண்டும்!


என்னைக் கருவாக்கிய 
தந்தைக்கும்
உருவாக்கி ஈன்றெடுத்த 
தாய்க்கும்
உடன் பிறந்தோர்க்கும் 
உறவினர்களுக்கும் 
நான் நன்றி சொல்ல வேண்டும்.

கதைச்சொல்லித் தூங்க 
வைத்த பாட்டிக்கும்
கைப்பிடித்து நடைபழகிய 
தாத்தாவுக்கும்
அகரமுதல கற்றுக்கொடுத்த 
ஆசிரியருக்கும்
சேற்றிலும் சகதியிலும் 
உருண்டு விளையாடிய 
நண்பர்களுக்கும் 
நான் நன்றி சொல்ல வேண்டும்.

எனக்கு வேலை 
கொடுத்த நிறுவனத்திற்கும்
எனக்கொரு தாரம் கொடுத்த 
தம்பதியர்க்கும்
என்னைத் தகப்பனாக்கிய 
பெருமை மிகு மனைவிக்கும்
அப்பா என்றழைத்து 
என் வம்சத்தை விருத்தி செய்த 
பிள்ளைகளுக்கும் 
நான் நன்றி சொல்ல வேண்டும்.

புதுவரவாய் 
வந்த எம்பிள்ளைகளின் 
இணையர்களுக்கும் 
அவர்களின் பெற்றோர்க்கும்
பெயரன்களுக்கும் 
பெயர்த்திகளுக்கும் 
நான் நன்றி சொல்ல வேண்டும்.

உயிரை மும்முறை 
மீட்டெடுத்த மருத்துவர்களுக்கும்
இறுதியில் 
என்னைச் சேர்த்தணைக்கவிருக்கும் 
மரணத்திற்கும் 
காடு வரை வரவிருக்கும் 
உற்றார் உறவினர்களுக்கும்
இப்பிறவி தந்த கடவுளுக்கும் 
நான் நன்றி சொல்ல வேண்டும்...!


வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com  

Post a Comment

Previous Post Next Post