வேண்டுதல்!

வேண்டுதல்!


மார்போடு கனமேறிய 
கொலுசுகளின் ஓசை
தனிமை நடையில் 
விரல்களில் சிறு அழுத்தம்
நடைவண்டியின் 
சக்கரங்களின் உருளும் சத்தம்
ஓயாத அழுகையில் 
உணவுப் பருக்கை சிந்தல்கள்....!

இத்தகைய நினைவுகளை 
மிஞ்சி விடுகிறது
தூசி தட்டி விழிப்பூட்டும் 
மகளதிகாரத்தின்
இன்று வரை திறக்கப்படாத 
பக்கங்களின் ஏக்கங்கள் நிறைந்த 
மௌனங்கள்...!

அந்த பொம்மையை
கை கொண்ட தாய்மையிடத்தே....!


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post