ஆட்டுக்குட்டியும் அம்மாவின் அன்பும்.!

ஆட்டுக்குட்டியும் அம்மாவின் அன்பும்.!


காலையிலே 
மழை பொழிகிறது 
பொழிகிற மழையில் 
நனைகிறது ஆட்டுக்குட்டிகள், 

நனைகிற  
ஆட்டுக்குட்டிகளுக்கு  
குடைபிடிக்கிறாள் அம்மா, 

குடைப்பிடிக்கிற 
அம்மாவுக்கு 
முத்தத்தை முத்துக்களாக  
முகத்தை நக்குக்குகிறது 

பனியில் நடுங்குகிற 
ஆட்டுக்குட்டிகளை 
அடைகாக்கும் ஆந்தையை போல 
முந்தானை துணியால் 
அடைகாக்கிறாள் அம்மா, 

பசியால் துடிக்கும் 
ஆட்டுக்குட்டிகளுக்கு  
தன் முலைகாம்பால்  
பசியாற்றுகிறது தாய்மை, 

பசியாறிய ஆட்டுக்குட்டிகள் 
தூங்குகிற குழந்தைகள் 
மீது துள்ளிக் குதித்து ஓடுகிறது, 

பசியால் தவித்த 
அம்மாவுக்கு புளியம் பழத்தை 
பறித்து  ஆட்டுப்பாலில் 
கரந்து விட்டு காலத்தை 
கழிக்கிறார் அப்பா 


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post