புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 99

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 99


அவனை நோக்கி வந்துகொண்டிருந்த அந்தக் கொடூர மிருகத்தைக் கண்டதும் இனித்தனது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என்பதைப் புரிந்து கொண்ட இர்வின், தனது  ஊன்றுகோலைக் கொண்டு  அதனை அடக்கத் தயாரானான்!

அப்பொழுதுதான் அவன் நினைத்துக் கூடப்பாராத அந்த நிகழ்வு நடந்தது.

வனத்தின் நாற்புறங்களிலிருந்தும் விரைந்து வந்த வனவாசிகள் அந்தக் கொடூர மிருகத்தைத் துவம்சம் செய்தனர்! மிருகம் தன் உயிரைவிட்டு நிலத்தில் சாய்ந்தபோதுதான் இர்வின் அமைதிப் பெருமூச்சு விட்டான்! அசடு வழிய நின்றிருந்த இர்வினிடத்தில்  அந்த வனவாசிகள் முரட்டுத்தனம் காந்த புன்னகை ஒன்றை விட்டுவிட்டு, இறந்து கிடந்த மிருகத்தை கூறுபோட்டு ஆளுக்கொரு துண்டை எடுத்துக்கொண்டவர்களாக அவ்விடத்தை விட்டும் நகர்ந்தனர்!

இர்வினிடத்தில் இப்பொழுது இனம்புரியாத பயமொன்று ஆட்கொண்டுவிட்டது! வனத்தின் நடுப்பகுதியில் வந்து வசமாக மாட்டிக்கொண்ட அவன் இப்பொழுது திரும்பிச் செல்வதா அல்லது தனது பயணத்தைத் தொடர்வதா என்பதில் சரியான தீர்மானம் ஒன்றை எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் நிர்க்கதியானான்!

பயணத்தைத் தொடர்ந்தாலும், வந்தவழியே திரும்பிச் சென்றாலும் அவன் ஒரே விதமான ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியவனாகின்றான்! பயணத்தைதொடர்ந்தால் அவன் திரும்பிவரும்போது, அவனது நண்பனோடும்  குடும்பத்தவர்களோடும் ஒன்றாகத் திரும்பி வரலாம் என்பதால், அதுவே அவனுக்குப் பாதுகாப்பானது என்பதை உணர்ந்த  அவன் தொடர்ந்து ஆற்றின் திசை நோக்கி நடக்கலானான்!

அவன் நடந்து கொண்டிருந்தபோது... ஆறு சமீபமாகிவிட்டதை உணர்ந்தான்!

ஆற்றங்கரை சமீபமாகி விட்டதான் ஆந்தைகளும், தேரைகளும்  கத்துவது அவனது காதுகளில் விழுந்தன! கொடிய மிருகங்கள் வாழும் பகுதியைக் கடந்து வந்து விட்டத்தை அவன் இப்பொழுது உணர்ந்தான்!

இன்னும் கொஞ்சதூரம் அவன் நடந்தபோது... வெகுதூரத்தில் வனவாசிகளின் பாடல்களின் ஒலி அவனது காதுகளில் விழுந்தது!

அது செரோக்கியின் கூட்டத்தார் என்பதை அவன் கிரகித்துக் கொண்டவனாக அவன் விரைந்து நடக்கலானான்!
(தொடரும்)


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post