அம்மா அப்பா!

அம்மா அப்பா!


அம்மா!
பத்துமாதம் மட்டுமா வாழ்வில் சுமக்கின்றாள்?
எப்போதும் ஏதோ ஒருகோலம் ஏற்றேதான்
எப்படியும் நாளும் சுமக்கின்றாள் அம்மாதான்!
இல்லறத்தின் ஆணிவேர் தாய்.

விட்டுக் கொடுக்கும் தியாக மனப்பான்மை,
சுற்றம் சிறக்கவைக்கும் பக்குவப் பண்புகள்,
தன்னலத்தை விட்டே  குடும்பம் தலைநிமிர
என்றும் துணையாவாள் தாய்.

அப்பா!
அப்பா சுமைகளோ வேறு விதங்கள்தான்!
எப்போதும் தன்கடமை தன்னைத் தவறாமல்
அப்பா பணிக்களத்தில் காணுகின்ற இன்பதுன்பம்
எல்லாம் குடும்பத்திற் கே!

வாழ்க்கையில் தென்றல் வருடுகின்ற நேரத்தில்
சார்ந்திருக்கும் தன்குடும்பம் கண்டே சிரித்திருப்பார்!
வாழ்க்கையில் வன்புயல் வீசுகின்ற நேரத்தில் 
சார்ந்திருக்கும் தன்குடும்பம் கண்டே மனத்திற்குள்
சோர்வும்  புறவெளியில் புன்சிரிப்பும் ஏந்துவார்!
ஏற்பார் பலவேடம் இங்கு.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post