அன்பு நசீமாம்மா எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் !

அன்பு நசீமாம்மா எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் !


குவைத்தில் உள்ள மன்றங்கள் முதல் 
நட்புள்ளங்கள் வரை எல்லோருமே நாங்கள் நன்கறிவோம்.

புகைப்படங்களின் காதலி, தன்னம்பிக்கையின் நாயகி, 
எங்களின் உடன்பிறவா சகோதரி எனில்; அது குவைத்தில் நசீமாம்மா மட்டுமே!

சிரித்தாலும், நாங்கள் ஜெயித்தாலும் எங்களின் வெற்றிகளை வரலாறாக்கியவர்.

வீட்டுக்காரி அழகையும் குழந்தைகள் முகத்தையும் எங்களுக்குப்பொக்கிஷமாக்கித் தந்தவர்,அன்பு நசீமாம்மா அவர்கள்.

கதைகதையாய் எழுதுவதும்,புரட்சிக் கவிதைகளாக  மேடையில் முழங்குவதும், கலைகள் வழியே பொழுதுகளை நிரப்பி பல தம்பிகளின் நெஞ்சில் நீங்காது நிறைந்ததும்; எங்கள் நசீமாம்மா தான்!

வலிகளுக்கு சாட்சி வாழ்வின் கோணல் எப்படி முடக்கும் என்பதற்குச் சான்று உறவுகள் விட்டால் கெட்டதற்கும், நட்பை உறவாய்க் கொண்டு இறுதிவரை வாழ்ந்ததற்கும் ஓர் உயரிய அடையாளம்; நசீமாம்மா!

எங்களுக்கெல்லாம் இன்றும் நாளையும் குவைத்தின் கதைகளை சொல்ல புகைப்படங்கள் உண்டெனில் நினைவுகள் சிதையும் தருணங்கள் முகநூலில் நிலைக்குமெனில் அதன் அனைத்துப் புகழும் எங்களின் நசீமாம்மாவினுடைய உழைப்பிற்கே காணிக்கை ஆகும்!

அவரின் மெல்லிய சிரிப்பைப் போல நினைவை விட்டு அகலா அவரின் தாய்மை உணர்வைப் போலஉள்ளே பிசைந்து பிசைந்து வருடும், உறுத்தும் அவருடைய மரணத்தின் கடைசி செய்தியைப் போல எங்களை விட்டகலாத வொரு வாழ்க்கை இந்த பாலைநில மெங்கும் சுவடுகளாய் பதிகிறது.

வலித்து வலித்து மனம் கனக்கிறது மிக்க உறுதிபூண்ட உள்ளத்தோடு எழுந்து வேண்டிக்கொள்கிறோம். 

இறைவனோ, இயற்கையோ  நசீமாமாவை ஆசிர்வதிக்கட்டும்!!

வித்யாசாகர்
குவைத்

Post a Comment

Previous Post Next Post