இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜூஹுன்.
யாரும் எதிர் பார்க்காத ஒரு மரணச்செய்தி
நஸீமா முஹம்மத் காலமானார் என்ற செய்தி மிகவும் வேதனையாக இருக்கின்றது.
இந்த உலகத்தில் எதுவும் நிறந்திரமில்லைதான் .நாமும் அதே பயணத்திற்கு எம்மை தயார் படுத்தவேண்டும் என்பதும் உண்மைதான்...
ஆனாலும் மனசு தாங்கவில்லை...
நல்ல ஒருதோழியாக,சகோதரியாக,தாயாக ..வேட்டையின் வளர்ச்சிக்கு உறுதுனையாக இருந்த ஜீவன் நம்மைவிட்டு போய்விட்டது.. என்பதை நினைக்கும்போது மனசு உடைந்து விட்டது.
சொல்ல முடியாத வேதனைகளை சுமந்து, அனுபவித்தாலும்,சிரித்துப் பேசுகின்ற அந்த உயர்ந்த பண்பு நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடப் புத்தகம் என்பதை மறுக்க முடியாது.
ஆனாலும்...
செய்தியை கேட்டவுடன் மனசு உடைந்துவிட்டது.
அத்தனை வேதனைகளையும் மறந்து கலகலப்பாகப் பேசி உற்சாகம் தரும் அந்த குரல் அடங்கிவிட்டதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
படைத்தவனிடமிருந்து வந்தோம் அவனிடமே போகின்றோம் என்பதுதான் நம் ஒவ்வொருவருக்கும் நிர்னயிக்கப்பட்ட நிதர்சனமான உண்மை.
அந்த உண்மை தெரிந்தும் அந்த செய்தியால் மனசு உடைந்துவிட்டது.
சகோதரி நஸீமாவுக்காக படைத்தவனிடம் பிராத்தனை செய்வதைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.
வேட்டை ஆசிரியர்
Tags:
அஞ்சலி