சத்தமில்லாமல்
உறங்கிக்கொண்டிருந்த
பூமியை
சத்தம் போட்டு
எழுப்பி விடுகிறது
உனது கொலுசு சப்தங்கள்,
நீ நடந்த
பாதையில்
மீண்டும் நடக்கிறது
கொலுசு
சப்த உரையாடல்களோடு ,
தெருவெங்கும்
உன்
பாதத்தின் பார்வைகள்
பார்வையில்லா
கொலுசுவின்
ஒலியின் நிமிடங்கள் ,
ஒவ்வொரு
பாதைகள் அழகாகிறது
பாதங்களிலிருந்து
வெளியேறிய
விரல்களின் தடங்களால் ,
கொலுசு பேசும்
மண் தரைகள் மகிழ ,
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
கவிதை