உயிரோடு கலந்து
உணர்வோடு பிணைந்து
பயிராக விளைந்து
தருவாகும் காதல்
பகலோடு சேர்ந்த
வெயிலாக ஆனாய்
பனியோடு கோர்த்த
குளிராகிப் போனாய்
புன்னகை மலரே
பூக்களின் தேசமே
கன்னிகை நீயடி
கட்டவிழும் மொட்டடி
சுவாசத்தில் கலந்த
வாசம் ஆனாய்
சுந்தரியே வாழ்வில்
வசந்தங்கள் பொழிந்தாய்
தந்திரங்கள் செய்து
என்னைக் கவிழ்த்தாய்
கந்தருவ மணத்தால்
நெஞ்சத்தில் இணைந்தாய்
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
கவிதை