புனித மக்கா ஹரம்ஷரீபின் இமாம் ஷேக் ஷுரைமின் குத்பா பேருரையில் இருந்து சிதறிய சில முத்துக்கள்...

புனித மக்கா ஹரம்ஷரீபின் இமாம் ஷேக் ஷுரைமின் குத்பா பேருரையில் இருந்து சிதறிய சில முத்துக்கள்...

விலைகள் உயர்ந்து விட்டன.
பெண்கள் நிர்வாணமாகி விட்டனர்.
மஸ்ஜித்கள் காலியாகி விட்டன.
அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் பாழாக்கப்பட்டன.
திருடர்கள் நியாயம் பேசுகிறார்கள்.
முஜாஹித்கள் வழிநடத்தலில் அநியாயம் செய்கிறார்கள்.

விபச்சாரம் ஹலாலாக்கப் பட்டு விட்டது.

திருமணம் முடிப்பது இயலாத ஒன்றாக மாறி விட்டது.

பெண்கள் ஆண்களை நிர்வகிப்பவர்களாக மாறி விட்டார்கள்.

முஸ்லிம்களுடைய பூமிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன.

ஏழைகள் குடையின்றி மழையில் தவிக்கின்றனர்.

இறுதி நாளின் பெரிய அடையாளங்களில் இன்னும் கொஞ்சம் தான் எஞ்சியுள்ளது.

எனவே துரிதமாக தௌபா செய்து கொள்ளுங்கள்.

ஓட்டைப் பைகளில் நன்மைகளை நிரப்புவதை தவிர்த்து கொள்ளுங்கள் .

அப்படியென்றால் என்ன?
அழகாக வுழு செய்கிறீர்கள்.
ஆனால். .....

தண்ணீரை வீண் விரயம் செய்கிறீர்கள். இது
"ஓட்டைப் பை"

ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்கள்.
ஆனால்.......

அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப் படுத்துகிறீர்கள். இது
"ஓட்டைப் பை"

இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்று ரப்பை வழிப்படுகிறீர்கள்.

ஆனால்........

குடும்ப உறவை துண்டித்து வாழ்கிறீர்கள். இது
"ஓட்டைப் பை"

நோன்பு நோற்று பசி தாகத்தில் பொறுமையோடு இருக்கின்றீர்கள்.

ஆனால். ......

பிறரை ஏசி, திட்டி சபிக்கிறீர்கள். இது
"ஓட்டைப் பை"

ஆடையை மறைத்து அபாயாக்களால் போர்த்துகிறீர்கள்.

ஆனால்........

அதையும் தாண்டி நறுமணம் கமழ்கிறது. இது
"ஓட்டைப் பை"

விருந்தினரை கண்ணியப் படுத்தி உபசரிக்கிறீர்கள்.

ஆனால்.....

அவர்கள் சென்ற பின் அவர்களைப் பற்றி குறை கூறி புறம் பேசுகிறீர்கள். 
இது ஓட்டைப் பை"

இறுதியாக சொல்கிறேன்
ஓட்டைப் பைகளில் உங்கள் நன்மைகளை நிரப்ப வேண்டாம். ஏனெனில், சிரமப்பட்டு அவைகளை சேகரிக்க,மறுபுறத்தால் இலேசாக அது விழுந்து விடும்.

ஆச்சரியம் .......
ஹஜ், உம்றா செய்ய முடியாது. 
காரணம் அதன் செலவுகள் அதிகம். 

ஆனால்

நல்ல கால நிலைகளை தேடி உள் நாட்டுக்குள்ளும், வெளி நாடுகளுக்கும் சுற்றுலா செல்ல முடிகிறது.

உழ்ஹிய்யா கொடுக்க முடியாது. விலை அதிகம். 

ஆனால்

அதிக விலையுள்ள i phone , ஆடம்பர பொருட்களை வாங்க முடியும்.

நாளாந்தம் சமூக வலைத்தளங்களில் நூறு செய்திகளை வாசிக்க முடியும்.

ஆனால்

குர்ஆனின் பத்து ஆயத்துக்களை ஓத நேரமில்லை.


யா ரப்பே! எனக்கும் நம் சமுதாயத்துக்கும் மன்னிப்பையும் நேர்வழியையும் தந்தருள்வாயாக... ! ஆமீன்‼️*

Post a Comment

Previous Post Next Post